states

img

நோயாளியின் உடம்பில் பிளாஸ்மாவுக்கு பதிலாக ஜூஸ் செலுத்திய மருத்துவமனைக்கு சீல்

பிளாஸ்மாவுக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸை நோயாளியின் உடலில் செலுத்திய மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. 
உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில், பிரதீப் பாண்டே (32 வயது) என்பவர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ப்லேட்லெட்ஸ் குறைவதால், நோயளிகளுக்கு ரத்தில் உள்ள பிளாஸ்மா செலுத்தப்படும். இந்த சூழலில், பிளாஸ்மாவுக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸை பிரதீப்பின் உடலில் செலுத்தப்பட்டது. இதனால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். போலி ரத்த வங்கியிலிருந்து பெறப்பட்ட பிளாஸ்மா என்று இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த நிலையில், பிளாஸ்மாவுக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸை பிரதீப்பின் உடலில் செலுத்திய மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.